கோவையில் தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இன்று 03.12.2021 நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.90-க்குட்பட்ட ஐஸ்வர்யா நகர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சிப்‌ பூங்கா மற்றும்‌ சிறுவர் விளையாட்டுத்திடலை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர்‌‌, அப்பகுதியிலுள்ள குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகளிடம்‌ பூங்காக்களைப் பராமரிப்பதற்காகப் பூங்காவின்‌ சாவியை ஒப்படைத்ததைத்‌ தொடர்ந்து,



வார்டு எண்‌.87க்குட்பட்ட வசந்தம்‌ கார்டன்‌, பிருந்தாவன‌ சாக்கில்‌, கங்கா நகர்‌ பகுதிகளில்‌ தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள்‌ மற்றும்‌ நீர்‌ உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌, பின்னர்‌, வார்டு எண்‌.94க்குட்பட்ட குறிச்சி, மாச்சம்பாளையம்‌ பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள்‌ மற்றும்‌ நீர் உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ மூலமாக குழாய்கள்‌ அமைத்து குறிச்சி குளத்திற்கு கொண்டு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ள பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களிடம்‌ உத்தரவிட்டார்‌.

அப்போது மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 2020-2021ம்‌ ஆண்டிற்குப் பாதாளச் சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள்‌, குடிநீர்‌ குழாய்கள்‌ மற்றும்‌ கேபிள்கள்‌ பதிப்பதற்குத் தோண்டப்பட்ட சாலைகள்‌ மற்றும்‌ மழையினால்‌ சேதமடைந்துள்ள‌ சாலைகளைச் சீரமைக்கவும்‌ 51.35 கிலோ மீட்டார்‌ நளத்திற்குச் சாலைகளைப் புதுப்பிக்கும்‌ பணிக்கு ரூ.34.93 கோடி மதிப்பில்‌ மேற்கொள்ள உலக வங்கி திட்டத்தின்கீழ்‌ நிதி ஆதாரம்‌ பெறும்‌ பொருட்டு, தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம்‌ (TNSUDP) நிறுவனத்தின்‌ மூலம்‌ மேற்கொள்ள மாற்றுப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, வருகின்ற 29.12.2021 ஒப்பந்தப்புள்ளிகள்‌ கோரப்பட்டுள்ளது.

இதில்‌ 8 பணிகள்‌ 51.35 கிலோ மீட்ட தொலைவிற்கு 34.93 கோடியில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும்‌ ஒப்பந்தப்புள்ளிகள்‌ கோரப்பட்ட பின்னர், சாலை அமைக்கும்‌ பணிகள்‌ துவங்கப்படும்‌. தரமான சாலைகள்‌ விரைவாகச் செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.90க்குட்பட்ட ஐஸ்வர்யா நகர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சிப்‌ பூங்கா மற்றும்‌ சிறுவர்‌ விளையாட்டுத்திடலில்‌ உள்ள இருக்கைகளில்‌ அமர்ந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராமு, உதவி செயற்பொறியாளாகள்‌ சரவணகுமார்‌, விமல் ராஜ்‌, சவிதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.39க்குட்பட்ட துக்கினார்‌ வீதியில்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தைத் தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையற்ற பொருட்களை அகற்றும்‌ பணிகளை மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...