கோவையில் தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இன்று 03.12.2021 நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.90-க்குட்பட்ட ஐஸ்வர்யா நகர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சிப்‌ பூங்கா மற்றும்‌ சிறுவர் விளையாட்டுத்திடலை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர்‌‌, அப்பகுதியிலுள்ள குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகளிடம்‌ பூங்காக்களைப் பராமரிப்பதற்காகப் பூங்காவின்‌ சாவியை ஒப்படைத்ததைத்‌ தொடர்ந்து,



வார்டு எண்‌.87க்குட்பட்ட வசந்தம்‌ கார்டன்‌, பிருந்தாவன‌ சாக்கில்‌, கங்கா நகர்‌ பகுதிகளில்‌ தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள்‌ மற்றும்‌ நீர்‌ உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌, பின்னர்‌, வார்டு எண்‌.94க்குட்பட்ட குறிச்சி, மாச்சம்பாளையம்‌ பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள்‌ மற்றும்‌ நீர் உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ மூலமாக குழாய்கள்‌ அமைத்து குறிச்சி குளத்திற்கு கொண்டு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ள பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களிடம்‌ உத்தரவிட்டார்‌.

அப்போது மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 2020-2021ம்‌ ஆண்டிற்குப் பாதாளச் சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள்‌, குடிநீர்‌ குழாய்கள்‌ மற்றும்‌ கேபிள்கள்‌ பதிப்பதற்குத் தோண்டப்பட்ட சாலைகள்‌ மற்றும்‌ மழையினால்‌ சேதமடைந்துள்ள‌ சாலைகளைச் சீரமைக்கவும்‌ 51.35 கிலோ மீட்டார்‌ நளத்திற்குச் சாலைகளைப் புதுப்பிக்கும்‌ பணிக்கு ரூ.34.93 கோடி மதிப்பில்‌ மேற்கொள்ள உலக வங்கி திட்டத்தின்கீழ்‌ நிதி ஆதாரம்‌ பெறும்‌ பொருட்டு, தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம்‌ (TNSUDP) நிறுவனத்தின்‌ மூலம்‌ மேற்கொள்ள மாற்றுப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, வருகின்ற 29.12.2021 ஒப்பந்தப்புள்ளிகள்‌ கோரப்பட்டுள்ளது.

இதில்‌ 8 பணிகள்‌ 51.35 கிலோ மீட்ட தொலைவிற்கு 34.93 கோடியில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும்‌ ஒப்பந்தப்புள்ளிகள்‌ கோரப்பட்ட பின்னர், சாலை அமைக்கும்‌ பணிகள்‌ துவங்கப்படும்‌. தரமான சாலைகள்‌ விரைவாகச் செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.90க்குட்பட்ட ஐஸ்வர்யா நகர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சிப்‌ பூங்கா மற்றும்‌ சிறுவர்‌ விளையாட்டுத்திடலில்‌ உள்ள இருக்கைகளில்‌ அமர்ந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராமு, உதவி செயற்பொறியாளாகள்‌ சரவணகுமார்‌, விமல் ராஜ்‌, சவிதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.39க்குட்பட்ட துக்கினார்‌ வீதியில்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தைத் தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையற்ற பொருட்களை அகற்றும்‌ பணிகளை மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...