பொள்ளாச்சியில் ஹாட் ஏர் 'பலூன் திருவிழா' நடத்த திட்டம் - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

மெக்சிகோ நாட்டில் நடந்த ஹாட் ஏர் பலூன் திருவிழாவைப் போன்று பொள்ளாச்சியிலும் ஹாட்டர் பலூன் திருவிழா கூடிய விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.



கோவை: பொள்ளாச்சியில் ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஹோட்டல்களில் ஆன்லைன் புக்கிங் வசதி மூலம் 22-லட்சம் ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும், மெக்சிகோ நாட்டில் நடைபெறுவது போல் கோவை மாவட்ட பொள்ளாச்சியில் ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி குள பணிகளைத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடமும் கேட்டறிந்தார்.



பின்னர், செய்தியாளர்களை கண்டித்த அவர், கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு வசதி செய்து தரப்படும் என அரசு அறிவித்துள்ளதாகவும், இரண்டு குளங்களிலும் படகு வசதிக்கான சாத்திய கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் 75-சதவீதம் நிறைவுற்ற நிலையில் 25-சதவீதம் பணிகள் கொரோனா தொற்று பரவலால் நிலுவையில், உள்ளதெனக் கூறிய அவர் வைரஸ் தொற்று குறைந்ததும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாகச் சுற்றுலா தளங்களை மூடுவது தொடர்பாகத் தக்க நேரத்தில் முதலமைச்சர் ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடுவார் என அவர் அப்போது குறிப்பிட்டார். சுற்றுலா துறைக்கென முதலமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் தனி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் உள்ளூர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருவதாகவும், தமிழ்நாடு ஹோட்டல்களை புதுப்பிக்க பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் வருவாயை இழந்திருப்பதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாடு ஹோட்டல்களில் சொமேட்டோ, சுவிக்கி, போன்று ஆன்லைன் இணையதளங்கள் மூலம் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாலும் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு ஹோட்டல்களில் புக் செய்யும் வசதிகளால் 22 லட்சம் வருவாய் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மெக்சிகோ நாட்டில் நடந்த ஹாட் ஏர் பலூன் திருவிழாவைப் போன்று பொள்ளாச்சியிலும் ஹாட்டர் பலூன் திருவிழா கூடிய விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...