உலக மாற்றுத்திறனாளிகள் தினம்‌: எடை குறைந்த நவீன செயற்கை அவயங்கள்‌ பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்..!‌

அரசு மருத்துவமனையில்‌ முடநீக்கியல்‌ மற்றும்‌ விபத்து சிகிச்சை நிறுவனம்‌ சார்பாக நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ பொருத்தப்பட்ட சுமார்‌ 50-மாற்றுத்திறனாளிகள் இந்த செயற்கை அவயங்கள்‌ அவர்கள்‌ வாழ்க்கையில்‌ மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என கூறினார்கள்‌.


கோவை: உலக மாற்றுத்திறனாளிகள் தினம்‌ ஒவ்வொரு வருடம்‌ டிசம்பர்‌ 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்நாள்‌ அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளை ஒட்டி கோயம்புத்தூர்‌ அரசு மருத்துவமனையில்‌ முடநீக்கியல்‌ மற்றும்‌ விபத்து சிகிச்சை நிறுவனம்‌ சார்பாக நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ பொருத்தப்பட்ட சுமார்‌ 50 மாற்றுத்திறனாளிகள் இந்த செயற்கை அவயங்கள்‌ அவர்கள்‌ வாழ்க்கையில்‌ மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என கூறினார்கள்‌.

இந்த நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ காரணமாக மாற்றுத்திறனாளிகள்‌ தங்கள்‌ சுய வேலைகளை மற்றவர்கள்‌ உதவி இன்றி தாங்களே செய்யும்‌ அளவிற்கு மாற்றி உள்ளதாகக் கூறினார்கள்‌.

உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தை ஒட்டி கோவை அரசு மருத்துவமனையில்‌ நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்‌ இன்று நடைபெற்றது.



எடை குறைந்த நவீன செயற்கை அவயங்கள்‌ பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளின்‌ செயற்கை அவயங்கள்‌ சரிபார்க்கப்பட்டுப் பராமரிப்பு பணிகள்‌ இம்முகாமில்‌ மேற்கொள்ளப்பட்டது.



இந்த நிகழ்வைக் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ நிர்மலா அவர்கள்‌ தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் ஊக்கப்படுத்து அவர்களுக்கு நினைவுப்‌ பரிசு வழங்கினார்‌. இந்த முகாமில்‌ கொரோனா காலத்திலும்‌ நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ தயாரிக்கும்‌ தொழில்‌ நுட்பவல்லுநர்கள்‌ பாலச்சந்தர்‌, ஆனந்த்‌, கோகுல்ராஜ்‌ ஆகியோர்களை ஊக்கப்படுத்தும்‌ விதமாக அவர்களுக்கும்‌ நினைவுப் பரிசு வழங்கினார்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...