திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10-அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.
திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்குக் குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.

திருப்பூர் மாநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்குக் குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீர் வீணான நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அளித்ததையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த குழாய் உடைப்பைச் சரி செய்தனர்.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 15-நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாக வெளியேறியது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்குக் குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீர் வீணான நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அளித்ததையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த குழாய் உடைப்பைச் சரி செய்தனர்.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 15-நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாக வெளியேறியது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.