திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், பணப் பயன்களைத் தொழிலாளர் பங்களிப்பு தொகையுடன் இணைக்கக் கூடாது, மாநிலங்களுக்கிடையே புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979-கட்டிடக் கட்டுமான தொழிலாளர் சட்டம் 1996-ஐ நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
மாநில அரசு நல வாரிய கூட்டத்தினை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு இலவச வீடு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.