கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கோவை மாநகராட்சி துணை ஆணையாளரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதிரன் ஆகியோர் சந்தித்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒப்பந்தங்கள் குறித்த முறையான ஆவணங்கள் இல்லை என கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில், அதுதொடர்பான ஆவணங்களை சமர்பிக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் வருகை தந்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார்.
மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளுக்காக 3,133-கோடியே 44-லட்சங்கள் செலவில் 119-ஒப்பந்த பணிகள் கடந்த ஆட்சியில் கோரப்பட்டிருந்தது. மேலும், அதிமுக ஆட்சியில் விடுவித்த 541-ஒப்பந்த பணிகளை தற்போதைய அரசு நீக்கியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், மக்களுக்கான அத்தியாவசிய பணிகள் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுப்பிய இவர்கள், பருவமழையால் கோவை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள்.
கோவை மாநகராட்சி துணை ஆணையாளரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதிரன் ஆகியோர் சந்தித்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒப்பந்தங்கள் குறித்த முறையான ஆவணங்கள் இல்லை என கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில், அதுதொடர்பான ஆவணங்களை சமர்பிக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் வருகை தந்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார்.
மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளுக்காக 3,133-கோடியே 44-லட்சங்கள் செலவில் 119-ஒப்பந்த பணிகள் கடந்த ஆட்சியில் கோரப்பட்டிருந்தது. மேலும், அதிமுக ஆட்சியில் விடுவித்த 541-ஒப்பந்த பணிகளை தற்போதைய அரசு நீக்கியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், மக்களுக்கான அத்தியாவசிய பணிகள் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுப்பிய இவர்கள், பருவமழையால் கோவை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள்.