கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள குடோனில் 886 கிலோ குட்கா பறிமுதல்.

ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தியதில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள குடோனில் 886 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை தடாகம் சாலை ஆர்.எஸ். புரம் பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த 886 கிலோ குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, சேரன் மாநகர் நேதாஜி குழந்தைகள் பூங்கா பகுதியில் வசிக்கும் கரூர் மாவட்டம் அப்பிபாளையம் செட்டியார் வீதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...