ஒமிக்ரான் வைரஸ்: அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



கோவை: ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார்.



தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-



ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த செய்தி அறிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முதல்வர் அறிவுறுத்தினார்.

பல வகையான வைரஸ் உருமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனாவும் உருமாறியுள்ளது. காலையில் மதுரை, திருச்சியைத் தொடர்ந்து தற்போது கோவை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'ஹை ரிஸ்க்' நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் உள்ளிட்ட முழுமையான சோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிந்தும் வீட்டு கண்காணிப்பில் இருப்பார்கள். மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு தற்போது அவசியம் இல்லை.

தடுப்பூசி போடுவதில் நாட்டில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 78%, இரண்டாம் தவணை தடுப்பூசி 44% என்ற அளவில் உள்ளது. கோவை தடுப்பூசி போடுவதில் மாநிலத்தில் முதலாவதாக உள்ளது. டெங்குவிற்கு 617-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தடுப்பூசி போடுவதில் தமிழகம் ஒரு இயக்கமாகச் செயல்படு வருகிறது. தமிழக முதல்வரே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பொருளாதாரத்தில் பின் தங்கி வருபவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகப் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை. 4-கோடி செலவில் உருவாக்கப்பட மரபணு சோதனை கூடமும் தமிழகத்தில் உள்ளது. ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர், செந்தில் வளவன், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர், டாக்டர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர், ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...