தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதி அமைப்பு: மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும்‌ முயற்சி..!

தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, மத்திய அரசால்‌ தொடங்கப்பட்ட ஆஜாதி கா அம்ரித்‌ மஹோட்சவின்‌ கீழ்‌, EPFO-வில்‌ பதிவு செய்துள்ள அனைத்து தனியார்‌ நிறுவன உறுப்பினர்களுக்காக, மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும்‌ முயற்சியை எடுத்துள்ளது.


கோவை: தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதி அமைப்பானது. மத்திய அரசால்‌ தொடங்கப்பட்ட ஆஜாதி கா அம்ரித்‌ மஹோட்சவின்‌ (இந்திய சுதந்திரத்தின்‌ 75-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்‌) கீழ்‌. EPFO வில்‌ பதிவு செய்துள்ள அனைத்து தனியார்‌ நிறுவன உறுப்பினர்களுக்காக, மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும்‌ முயற்சியை எடுத்துள்ளது.

இந்த வசதியின்‌ மூலம்‌ உறுப்பினர்கள்‌ தாங்களாகவே இணைய வழியில்‌ வாரிசு நியமனம்‌ செய்யலாம்‌. இதனை எந்த நேரத்திலும்‌ புதுப்பிக்கலாம்‌.

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களின்‌ அலைபேசி எண்‌ UAN எண்ணுடன்‌ இணைக்கப்பட்டும்‌, அவர்களின்‌ UAN ன்‌ ஆதார்‌ சரிபார்ப்பும்‌ முடிந்திருந்தால்‌ இந்த வசதியை பெற முடியும்‌. இந்த செயல்முறை மிகவும்‌ பயணர்‌ நட்புடன்‌ உள்ளது.

ஏனெனில்‌ ஒருங்கிணைந்த உறுப்பினர்‌ இடைமுக போர்ட்டலில்‌ உள்நுழைந்தவுடன்‌ மின்னணு வாரிசு தாக்கல்‌ செய்ய ஒரு Pop up சாளரம்‌ காண்பிக்கப்படும்‌.

மின்னணு வாரிசு பதிவேற்றம்‌ செய்யும்‌ போது நினைவில்‌ கொள்ளவேண்டிய விஷயங்கள்‌:

உறுப்பினரின்‌ UAN எண்‌, ஆதாரில்‌ பதிவிட்ட அலைபேசி எண்‌, ஸ்கேன்‌ செய்யப்பட்ட பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌ (100 KB-க்கு) மிகையாமல்‌ இருக்கவேண்டும்‌. இவையணைத்தும்‌ உள்நுழைவதற்கு முன்‌ உடனடியாக இருத்தல்‌ அவசியம்,‌ பிறகு இந்த அமைப்பு உறுப்பினர்களுக்கு, அடுத்தடுத்து பதிவிடும்‌ முறையை வழிகாட்டும்‌ இவை உறுப்பினருடைய பதிவிட்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்‌ OTP சரிபார்த்தல்‌ வரை நிகழும்‌.

இந்த மின்னணு வாரிசு நியமன செயல்பாட்டினால்‌ உறுப்பினர்கள்‌ / பயனாளிகள்‌ தங்களது PF பணத்தை திரும்பப்பெறும்‌ படிவங்கள்‌ குறிப்பாக ஓய்வூதிய படிவங்களை இணையவழி மூலமாக ஓய்வு பெறும்‌ நேரத்தில்‌ கூடுதல்‌ ஆவணங்கள்‌ இல்லாமல்‌ தாக்கல்‌ செய்ய உதவுகிறது. இவ்வாறு நியமிக்கப்பட்ட வாரிசுதாரர்கள்‌, உறுப்பினர்கள்‌ திடீரென துரதிருஷ்டவசமாக மரணம்‌ அடைந்தால்‌ இணையவழி மூலமாக படிவங்களை தாக்கல்‌ செய்வதன்‌ மூலம்‌ சிரமமின்றி EPF சேமிப்பை திரும்ப பெறலாம்.‌

எனவே அனைத்து EPF உறுப்பினர்களும்‌ உடனடியாக ஒருங்கிணைந்த உறுப்பினர்‌ இடைமுக போர்டல்‌ மூலம்‌ தங்களது மின்னணு வாரிசை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மேலும்‌ அனைத்து EPF உறுப்பினர்களும்‌ ஆதார்‌ மற்றும்‌ வங்கிக்கணக்கு போன்ற அடிப்படை KYC விவரங்களை தங்கள்‌ UAN உடன் இணைத்து EPF-ன்‌ அனைத்து இணையவழி சேவைகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...