மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்வுகளைச் சாலையில் சென்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
கோவை: மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குக் கழிவுகளை அகற்றும்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குக் கழிவுகளை அகற்றும்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதனிடையே, கோவை அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாயில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிலர், உடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்வுகளைச் சாலையில் சென்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரிய இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.
சிறிய கால்வாய்கள், கழிவுநீர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு எந்தப் பணியாக இருந்தாலும் உரியப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், என்றார்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குக் கழிவுகளை அகற்றும்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாயில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிலர், உடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்வுகளைச் சாலையில் சென்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரிய இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.
சிறிய கால்வாய்கள், கழிவுநீர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு எந்தப் பணியாக இருந்தாலும் உரியப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், என்றார்.