கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கால்வாயில் இறங்கி வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள்..!

மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்வுகளைச் சாலையில் சென்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


கோவை: மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குக் கழிவுகளை அகற்றும்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குக் கழிவுகளை அகற்றும்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.



இதனிடையே, கோவை அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாயில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிலர், உடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்வுகளைச் சாலையில் சென்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரிய இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.

சிறிய கால்வாய்கள், கழிவுநீர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு எந்தப் பணியாக இருந்தாலும் உரியப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...