தூய்மை பணியில் உள்ள ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் - திருப்பூரில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் கோரிக்கை

தமிழக அரசு உடனடியாக தூய்மை பணியில் உள்ள ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்றும் மாநில அளவில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: தமிழக அரசு உடனடியாக தூய்மை பணியில் உள்ள ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்றும் மாநில அளவில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்துள்ள தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் இரண்டாவது நாளாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.



இந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கி பணியாளர்களிடம் குறைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், தூய்மை பணியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நியாயமாகச் சென்று சேர வேண்டிய சம்பளம் சேர்வதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. அவற்றையெல்லாம் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முறைகேடுகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டு, அறிக்கை வந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், தமிழக அரசுக்கு மூன்று கோரிக்கைகளையும் கூறினார்.

அதன்படி, தூய்மை பணியில் தமிழக அரசு ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதிப்பை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், மாநில அளவில் தூய்மை பணியாளர்களுக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்றவர். தூய்மை பணியாளர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாம் இருப்பதால், வருடத்தில் 4 முகாம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தூய்மை பணியில் ஈடுபடும் வடமாநில ஆட்களிடம் தினம் 100 ரூபாய் பிடித்தம் செய்வதாகக் குற்றச்சாட்டு உள்ளது.



அதுகுறித்து ஆய்வு செய்து உரியப் பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், கொரோனா தொற்றால் உயிரிழந்த முன் களப் பணியாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...