கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

இராமநாதபுரம்‌ சிக்னல்‌ அருகில்‌ பாதாள சாக்கடை அமைக்கும்‌ பணிகள்‌, பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, வார்டு எண்‌.66க்குட்பட்ட சிங்காநல்லூர்‌ பகுதியில்‌ கழிவு தொட்டி அமைக்கும்‌ பணிகளை ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.65க்குட்பட்ட இராமநாதபுரம்‌ சிக்னல்‌ அருகில்‌ பாதாள சாக்கடை அமைக்கும்‌ பணிகள்‌, பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌,



வார்டு எண்‌.66க்குட்பட்ட சிங்காநல்லூர்‌ பகுதியில்‌ கழிவு தொட்டி அமைக்கும்‌ பணிகளையும்‌, வார்டு எண்‌.59க்குட்பட்ட பகுதியில்‌ கழிவுநீர்‌ தொட்டியில்‌ சோதனை ஓட்டத்தையும்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, கழிவு பண்ணையின்‌ மூலம்‌ சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப. அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, அதன்‌ செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ பாதாள சாக்கடை திட்டம்‌-3 கீழ் ரூ.143 கோடி மதிப்பீட்டில்‌ மணியகாரன்பாளையம்‌ முதல்‌ ஒண்டிப்புதூர்‌ வரை 221 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி சாலையில்‌ 5 கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு பணிகள்‌ மேற்கொள்ளப்படுகிறது.

இதில்‌ தற்போது 2 கிலோ மீட்டார்‌ தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ முடிக்கப்பட்டுள்ளது. மேலும்‌ 24X7 குழாய்‌ அமைக்கப்படவுள்ள இடத்தையும்‌, 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்‌ அமைக்கப்படவுள்ள இடத்தையும்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்.

மேலும்‌, ஒண்டிப்புதூர், நெசவாளர்‌ காலனி பகுதியில்‌ தற்போது முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நிறைவுபெற்றுள்ளது. தற்போது சோதனை ஓட்டம்‌ செய்து 2300 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்து, அதன்‌ பின்னர்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்‌ என மாநகராட்சி பொறியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.



அதேபோல, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59க்குட்பட்ட ஜெய்சாந்தி தியேட்டர்‌ அருகில்‌ பாதாள சாக்கடை சந்திப்பு கழிவு தொட்டியில்‌ சோதனை ஓட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.



பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்குட்பட்ட பட்டணம்‌, இட்டேரி சாலை பிரதான குழாய்‌ அமைக்கப்பட்ட இடத்தை மேற்பார்வையிட்டு சாலைகளை உடனடியாக சீரமைக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட கல்லிமடை சந்திப்பு கோ - ஆப்பரேட்டிவ் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மாநகரப்பொறியாளர்‌ (பொ) ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ செந்தில்குமார் ரத்தினம்‌, நிர்வாக பொறியாளர்‌ (பாதாள சாக்கடை திட்டம்‌) உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர்‌ சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா, உதவி செயற்பொறியாளர்கள்‌ எழில்‌, ஃபெர்மன்‌ அலி, சத்யா, ரவி மற்றும்‌ மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...