சிக்கலாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று இரவு சிக்கலாம்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, சிக்கலாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களைப் பிடித்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ததோடு கிணத்துக்கடவு கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா(23) மற்றும் அஜித்(23) ஆகியோர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று இரவு சிக்கலாம்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, சிக்கலாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களைப் பிடித்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ததோடு கிணத்துக்கடவு கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா(23) மற்றும் அஜித்(23) ஆகியோர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.