திருப்பூரில் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளி தங்கை தர்ணா போராட்டம்.!!

பேச முடியாத காது கேட்காத தங்கையின் சொத்தை அபகரிக்க முயலும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை மற்றும் கணவருடன் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பேச முடியாத காது கேட்காத தங்கையின் சொத்தை அபகரிக்க முயலும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை மற்றும் கணவருடன் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து இவரது மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு செல்வராஜ் என்ற மகனும் ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

இதில் ராஜேஸ்வரிக்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது. நாச்சிமுத்து தனது மகன் மற்றும் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து தனது சொத்தை இருவருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். மேலும் தான் சொந்த உழைப்பில் சம்பாதித்த, தாராபுரம் அடுத்த தளவாய் பட்டிணம் கிராமத்தில் உள்ள 11.44 ஏக்கர் நிலத்தை மகளின் பெயரில் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக செல்வராஜ் மற்றும் அவரது மனைவி, தங்கைக்கு கொடுத்த நிலத்தில் பங்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். மேலும் அங்கு அவர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரி சார்பில் தாராபுரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அடியாட்களை கொண்டு எங்களை மிரட்டி அதோடு மட்டுமல்லாமல் சாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாகத் திட்டியுள்ளனர்.



இதனால் நாங்கள் உயிர் பயத்தோடு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் எங்களது சொத்தை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். எங்கள் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது மகள் மற்றும் மருமகன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...