மனநலம் பாதிகப்பட்ட பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்த தாய்- காப்பகம் வேண்டி கண்ணீர்


கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா (26). திருமணமான இவரின் குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது கணவர் பியூலாவை விட்டுச் சென்றுள்ளார்.



இதனால் மனவேதனையில் காணப்பட்ட பியூலா  கடந்த இரு மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அவரது தாய் தனலட்சுமியின் அரவணைப்பில் இருந்துள்ளார். இதனிடையே, அப்பகுதியினரை கற்களைக் கொண்டு அடிப்பதும், சாலையில் திரிவதுமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் தலையில் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்.



இதைத்தொடர்ந்து, அவரது தாய் பியூலாவை வீட்டினுள் சிறைவத்துள்ளார். தற்போது அப்பெண்ணை வீட்டின் அருகே உள்ள கோவிலில் கை, கால்களை கட்டி அமரவைத்துள்ளார்.

இதுகுறித்து, தனலட்சுமி கூறுகையில், என் மகளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் மாத்திரை, மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தனர். நான் அங்கேயே உள்நோயாளியாக அனுமதிக்கக் கோரிய போது அவர்கள் மறுத்து விட்டனர். நான் காலில் விழுந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் கேட்கின்றனர். அந்தளவிற்கு பணம் எங்களிடம் இல்லை. அரசு நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்து என் மகளை குணமடையச் செய்ய வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வியூலாவின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அகற்றினர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...