மனநலம் பாதிகப்பட்ட பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்த தாய்- காப்பகம் வேண்டி கண்ணீர்


கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா (26). திருமணமான இவரின் குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது கணவர் பியூலாவை விட்டுச் சென்றுள்ளார்.



இதனால் மனவேதனையில் காணப்பட்ட பியூலா  கடந்த இரு மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அவரது தாய் தனலட்சுமியின் அரவணைப்பில் இருந்துள்ளார். இதனிடையே, அப்பகுதியினரை கற்களைக் கொண்டு அடிப்பதும், சாலையில் திரிவதுமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் தலையில் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்.



இதைத்தொடர்ந்து, அவரது தாய் பியூலாவை வீட்டினுள் சிறைவத்துள்ளார். தற்போது அப்பெண்ணை வீட்டின் அருகே உள்ள கோவிலில் கை, கால்களை கட்டி அமரவைத்துள்ளார்.

இதுகுறித்து, தனலட்சுமி கூறுகையில், என் மகளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் மாத்திரை, மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தனர். நான் அங்கேயே உள்நோயாளியாக அனுமதிக்கக் கோரிய போது அவர்கள் மறுத்து விட்டனர். நான் காலில் விழுந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் கேட்கின்றனர். அந்தளவிற்கு பணம் எங்களிடம் இல்லை. அரசு நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்து என் மகளை குணமடையச் செய்ய வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வியூலாவின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அகற்றினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...