சாய ஆலைகளில் கழிவு நீர் தொட்டிகளை சரிவர ஆய்வு செய்ய தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் - திருப்பூரில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும், அதனை கவனிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வெங்கடேசன், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர்.



கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும், அதனை கவனிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வெங்கடேசன், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர்.

திருப்பூர்: சாய ஆலைகளில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வற்கு மனிதர்களை பயன்படுத்தாமல் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், இதனை மீறும் சாய ஆலை உரிமையார்கள் மீதும், அதனை ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் எச்சரிக்கை.

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் கொத்துக்காடு தோட்டத்தில் ‘பேன்டோன் டையர்ஸ்’ என்ற சாய ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ம் தேதி, சாய ஆலையில் உள்ள, இரண்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய, திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த, ஆறு பேர் சென்றனர்.

அப்போது, சுத்தம் செய்ய சென்ற வடிவேல் (32) மற்றும் அவரை காப்பாற்ற சென்ற, நிறுவனத்தில் வேலை செய்யும் மேலாளர் தினேஷ்பாண்டி (32) மற்றும் சாய ஆலையின் பிட்டராக பணியாற்றி வந்த ராஜேந்திரன்( 55) ஆகியோர் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொட்டியை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பாக, சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமி (48) என்பவர் மீது, ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, வீரபாண்டி போலீஸார் அவரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆய்வு செய்து, சாய ஆலைக்கு நோட்டீஸ் வழங்கினார்.

இந்த நிலையில், விஷவாயு தாக்கி, 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து, விசாரணை நடத்த டெல்லியில் இருந்து தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் இன்று திருப்பூர் வந்தார்.



பின்னர் சம்பவம் நடந்த சாய ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, மேலும் அரசு உதவிகள் கிடைக்கப் பெற்றது என்பது குறித்து கேட்டறிந்தார்.மேலும், அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 3 நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். இன்று சாய ஆலை கழிவுநீர் தொட்டில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த ஆலையில் ஆய்வு செய்துள்ளேன். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டேன்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் SCST சட்டப்படி அவர்கள் குடும்பத்திற்கு 8.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். முதற்கட்டமாக, அவர்களின் வங்கி கணக்கிற்கு 4 லட்சம் போடப்பட்டுள்ளது. மேலும், MS சட்டப்படி 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சாய ஆலைகள் அதிகம் காணப்படுகிறது. எனவே, கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சாய ஆலை உரிமையாளர்கள், மனிதர்களைப் பயன்படுத்தாமல் இயந்திரங்களைக் கொண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் முறையாக ஆய்வுகள் மேற்கொண்டால், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். ஆனால், அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும், அதனை கவனிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...