திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!

24-ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.


திருப்பூர்: 24-ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுவதுடன், உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றிய பகுதியிலுள்ள கிராமங்களுக்குக் குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில் 58.00 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,145 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பிஏபி 4 ம் மண்டலத்திற்குப் பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், குடிநீர் என வினாடிக்கு 1010 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் திருமூர்த்திமலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அணை நிரம்பியதையடுத்து பாலாற்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறக்கப்பட்டு பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கும், கேரளா மாநிலம் சித்தூர், ஒலவங்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணை கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி நிரம்பியது. அதன் பிறகு 24 ஆண்டுகளாக நிரம்பவில்லை. கடந்த 5, 26, 28ம் தேதிகளில் நிரம்பிய நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் நீர்வரத்து குறைந்ததாதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...