இன்று முதல் நீலகிரி-கேரளா இடையே பொது போக்குவரத்து துவக்கம்..!

நீலகிரியிலிருந்து கேரளாவிற்கு இன்று தமிழக அரசின் அறிவிப்பின் படி, தடையின்றி போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இன்று பத்து பேருந்துகள் இயக்கப்பட்டது.



நீலகிரி: கொரோனா தொற்று காரணமாகப் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் நீலகிரி, கேரளா இடையே பொது போக்குவரத்து துவங்கியது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத் தமிழகம் கேரளா இடையேயான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரயில் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த பயணிகள், பேருந்து போக்குவரத்து தடைப்பட்டதால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் நீலகிரியிலிருந்து கேரளாவிற்கு இன்று தமிழக அரசின் அறிவிப்பின் படி, தடையின்றி போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இன்று பத்து பேருந்துகள் இயக்கப்பட்டது. உதகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து கோவை வழி மார்க்கமாகப் பாலக்காட்டிற்கும், கூடலூரிலிருந்து சுல்தான் பத்தேரி மற்றும் நாடுகானி வழியாக நிலம்பூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்குப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி கேரளா மாநிலம் இடையேயான பொது போக்குவரத்து சேவை தொடங்கியதையடுத்து எல்லையோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...