இன்று முதல் நீலகிரி-கேரளா இடையே பொது போக்குவரத்து துவக்கம்..!

நீலகிரியிலிருந்து கேரளாவிற்கு இன்று தமிழக அரசின் அறிவிப்பின் படி, தடையின்றி போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இன்று பத்து பேருந்துகள் இயக்கப்பட்டது.



நீலகிரி: கொரோனா தொற்று காரணமாகப் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் நீலகிரி, கேரளா இடையே பொது போக்குவரத்து துவங்கியது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத் தமிழகம் கேரளா இடையேயான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரயில் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த பயணிகள், பேருந்து போக்குவரத்து தடைப்பட்டதால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் நீலகிரியிலிருந்து கேரளாவிற்கு இன்று தமிழக அரசின் அறிவிப்பின் படி, தடையின்றி போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இன்று பத்து பேருந்துகள் இயக்கப்பட்டது. உதகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து கோவை வழி மார்க்கமாகப் பாலக்காட்டிற்கும், கூடலூரிலிருந்து சுல்தான் பத்தேரி மற்றும் நாடுகானி வழியாக நிலம்பூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்குப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி கேரளா மாநிலம் இடையேயான பொது போக்குவரத்து சேவை தொடங்கியதையடுத்து எல்லையோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...