கோவையில்‌ மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18-பேர் கோரிக்கை மனு அளித்தனர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 18-பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 18-பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா தலைமையில்‌ இன்று (01.12.2021) நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 18 பேர்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்களிடம்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ சொத்துவரி விதிப்பு, காலியிட வரிவிதிப்பு, சொத்துவரி பெயர்‌ மாற்றம்‌, தொழில்‌ வரி விதித்தல்‌, தொழில்‌ உரிமம்‌ வழங்குதல்‌, பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குதல்‌ மற்றும்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை அளித்தனர்‌.

இன்றைய குறைத்தீர்‌ கூட்டத்தில்‌ நகரமைப்பு பிரிவிற்கு 6-மனுக்களும்‌, வருவாய்‌ பிரிவிற்கு 4- மனுக்களும்‌, மாநகராட்சி பொறியியல்‌ பிரிவிற்கு 5-மனுக்களும்‌, கணக்கு பிரிவிற்கு 1-மனுவும்‌, பொதுச் சுகாதாரப்‌ பிரிவிற்கு 1-மனுவும்‌, பொதுப் பிரிவிற்கு 1-மனுவும்‌ என மொத்தம்‌ 18- மனுக்கள்‌ பெறப்பட்டது.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ இம்மனுக்களின்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, ஒவ்வொரு வாரமும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல அலுவலகங்களில்‌ புதன்கிழமையன்று‌, மத்திய மண்டலத்தில்‌ வெள்ளிக்கிழமையன்று‌ சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ நடைபெறும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள்‌ கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்‌ எனவும்‌ குடிநீர்‌ வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி மற்றும்‌ பொதுமக்களின்‌ கோரிக்கைகள்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

இக்கூட்டத்தில்‌ கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ செந்தில்குமார் ரத்தினம்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...