உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை: உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனாவின் வீரியமிக்க புதிய வைரஸான ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சாலக்குடி சாலை வழியாக வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் எல்லைப்பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இரு மாநில போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக இரு மாநிலங்களுக்கு இடையே செல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கேரளத்திலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வந்து செல்கின்றனர்.
இருப்பினும் போலீஸாா் கேரளத்திலிருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்துள்ளனரா என்ற விசாரணைக்குப் பின்னரே வால்பாறைக்குச் செல்ல தமிழக போலீஸாா் அனுமதித்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனாவின் வீரியமிக்க புதிய வைரஸான ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சாலக்குடி சாலை வழியாக வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் எல்லைப்பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இரு மாநில போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக இரு மாநிலங்களுக்கு இடையே செல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கேரளத்திலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வந்து செல்கின்றனர்.
இருப்பினும் போலீஸாா் கேரளத்திலிருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்துள்ளனரா என்ற விசாரணைக்குப் பின்னரே வால்பாறைக்குச் செல்ல தமிழக போலீஸாா் அனுமதித்து வருகின்றனர்.