கோவையில் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் திருட்டு..!

சின்னியம்பாளையம் பகுதியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 45,000 திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சின்னியம்பாளையம் மதுரை வீரன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரின் மனைவி காமாட்சி (52). இவர் இருகூர் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது சம்பளம் அவரது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காமாட்சி தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக இருகூர் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்க்கு சென்றார்.

அப்போது, வங்கி ஏடிஎம் அறையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் காமாட்சிக்கு பணம் எடுப்பதற்கு உதவி செய்தார். பின்னர், தனது வீட்டிற்கு காமாட்சி திரும்பி வந்துவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக காமாட்சிக்கு மெசேஜ் வந்தது.

இதையடுத்து, அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு சென்று மேனேஜரிடம் விளக்கம் கேட்டார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், தனது ஏடிஎம் கார்டு தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த ஏடிஎம் கார்டை வாங்கிப் பார்த்த மேனேஜர் இது உங்களது ஏடிஎம் கார்டு இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, பணம் எடுத்துக் கொடுப்பது போல நடித்த மர்ம நபர் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, காமாட்சி சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...