பொள்ளாச்சியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கம் - வியாபாரிகள் மகிழ்ச்சி..!

அதேசமயம், இரு மாநிலங்களுக்கு இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழக - கேரள பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில், பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இரு மாநிலங்களில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பொது போக்குவரத்து சேவை தொடங்க தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று முதல் பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி உள்ளிட்ட எட்டு வழி தடங்களில் போக்குவரத்து சேவை தொடங்கியது.



சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக - கேரள பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



கேரள எல்லை வரை பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், நகர்ப்புறங்களுக்குச் செல்ல சிரமப்பட்டு வந்ததாகவும், தற்போது பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இரு மாநிலங்களுக்கு இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...