கோவையில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு..!

இதில், 70 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


கோவை: கோவை திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்கள், இளம் வயதிலேயே திருக்குறளில் உள்ள கருத்துகளை அறிந்து கொள்ளும் வகையில், திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

இதில், 70 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மொத்தம் ஆயிரத்து 330 திருக்குறளையும், முழுமையாக ஒப்புவிக்கும் திறன், இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை, சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

அதேபோல, ஏற்கனவே போட்டியில் பரிசு பெற்றவர்கள், மீண்டும் பங்கேற்க கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது www.tamilvalarchithurai.com என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...