கோவையில் சாலையில் செல்வோரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் கடந்த சில நாட்களாக ஏர் கன் என கூறப்படும் துப்பாக்கிகளுடன் சிலர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கேரள தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டார்.
அந்த துப்பாக்கியை தமது பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும் அதற்குரிய பில்களை அவர் கொடுத்ததால் போலீசார் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்தனர்.
இந்நிலையில் நேற்று காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் தலைமையிலான போலீசார் ஆவாரம் பாளையம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று வருவோரை ரகசியமாக போட்டோ எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் மேலும் சாலையில் செல்வோரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாகவும் ரோந்து சென்ற போலீசாருக்கு தகவல் கிடைத்தது
இதையடுத்து போலீசார் அவரம்பலயம் ரயில்வே கேட் அருகே சென்றனர். அந்த நபரை கண்காணித்தனர்.
சிறிது நேரத்தில் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து சாலையில் செல்வோரை மிரட்டினார். இதையடுத்து போலீசார் அந்த நபரை அழைத்து விசாரிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அந்த நபரை சோதனை நடத்தியபோது அவரிடம் இரண்டு கைத்துப்பாக்கிகள் இருந்தது. மேலும் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியை சேர்ந்த அப்துல் அலி என்பவரின் மகன் சமீர் உல் ஹக் (37) என்பது தெரியவந்தது.
கோவையில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கும் பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில் பென் ட்ரைவ் ஒன்று கைப்பற்றப்பட்டது. பென்டிரைவை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பென்டிரைவில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் ஏராளமாக இருந்தது.
இதுபற்றி விசாரணை நடத்தியபோது வீடியோக்களை வைத்து சமீர் உல் ஹக் மிரட்டி பணம் பறித்ததும் பணம் தராதவர்களை துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து சமீர் உல் ஹக் யார் யாரை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காட்டூர் போலீசார் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சமீர் உல் ஹக் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக ஏர் கன் என கூறப்படும் துப்பாக்கிகளுடன் சிலர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கேரள தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டார்.
அந்த துப்பாக்கியை தமது பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும் அதற்குரிய பில்களை அவர் கொடுத்ததால் போலீசார் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்தனர்.
இந்நிலையில் நேற்று காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் தலைமையிலான போலீசார் ஆவாரம் பாளையம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று வருவோரை ரகசியமாக போட்டோ எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் மேலும் சாலையில் செல்வோரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாகவும் ரோந்து சென்ற போலீசாருக்கு தகவல் கிடைத்தது
இதையடுத்து போலீசார் அவரம்பலயம் ரயில்வே கேட் அருகே சென்றனர். அந்த நபரை கண்காணித்தனர்.
சிறிது நேரத்தில் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து சாலையில் செல்வோரை மிரட்டினார். இதையடுத்து போலீசார் அந்த நபரை அழைத்து விசாரிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அந்த நபரை சோதனை நடத்தியபோது அவரிடம் இரண்டு கைத்துப்பாக்கிகள் இருந்தது. மேலும் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியை சேர்ந்த அப்துல் அலி என்பவரின் மகன் சமீர் உல் ஹக் (37) என்பது தெரியவந்தது.
கோவையில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கும் பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில் பென் ட்ரைவ் ஒன்று கைப்பற்றப்பட்டது. பென்டிரைவை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பென்டிரைவில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் ஏராளமாக இருந்தது.
இதுபற்றி விசாரணை நடத்தியபோது வீடியோக்களை வைத்து சமீர் உல் ஹக் மிரட்டி பணம் பறித்ததும் பணம் தராதவர்களை துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து சமீர் உல் ஹக் யார் யாரை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காட்டூர் போலீசார் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சமீர் உல் ஹக் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.