புகாரின் பேரில் வி.சி.க., நிர்வாகி ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பெண் கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த, வி.சி.க., நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜன் (44). இவர், தபால் துறையில் போஸ்ட்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமிக்கும், நீண்ட நாட்களாக, வழித்தட பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர், அற்புதராஜனிடம், அடிக்கடி தகராறு செய்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, அற்புதராஜன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து அறிவுரை வழங்கினர்.
இதனையடுத்து, தன்னையும் தன் மனைவியையும் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அற்புதராஜன் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பெண் கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜன் (44). இவர், தபால் துறையில் போஸ்ட்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமிக்கும், நீண்ட நாட்களாக, வழித்தட பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர், அற்புதராஜனிடம், அடிக்கடி தகராறு செய்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, அற்புதராஜன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து அறிவுரை வழங்கினர்.
இதனையடுத்து, தன்னையும் தன் மனைவியையும் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அற்புதராஜன் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பெண் கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.