கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக 16 ஆயிரத்து 725 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.16 ஆயிரத்து, 725 வழங்கும் அரசாணையை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில், தினக்கூலி அடிப்படையில், 3,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான தினக்கூலியை, ஆண்டுக்கு ஒருமுறை, அப்போதைய விலைவாசியை கணக்கிட்டு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்து அறிவிக்கிறார்.
அதன்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலியாக, 475 ரூபாய் நிர்ணயித்திருந்தாலும், மாநகராட்சியில் வேலைபார்ப்போருக்கு, இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, மாதம் ரூ.9,000 - 10,000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக, 16 ஆயிரத்து, 725 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது. தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், இணை ஆணையர் சிவகாமி இல்லாத காரணத்தால், நிர்வாக காரணங்களை கூறி, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில், தினக்கூலி அடிப்படையில், 3,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான தினக்கூலியை, ஆண்டுக்கு ஒருமுறை, அப்போதைய விலைவாசியை கணக்கிட்டு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்து அறிவிக்கிறார்.
அதன்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலியாக, 475 ரூபாய் நிர்ணயித்திருந்தாலும், மாநகராட்சியில் வேலைபார்ப்போருக்கு, இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, மாதம் ரூ.9,000 - 10,000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக, 16 ஆயிரத்து, 725 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது. தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், இணை ஆணையர் சிவகாமி இல்லாத காரணத்தால், நிர்வாக காரணங்களை கூறி, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.