கோவை சுகுணாபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தம்..!

மக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மதுக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.


கோவை: கோவை சுகுணாபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று தன்னாசியப்பன் கோவில் கேட்டிலும், உள்பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இது குறித்து மதுக்கரை வனச்சரகர் சந்தியா கூறுகையில், "சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுவரை ஆட்கள், கால்நடைகள், வளர்ப்பு நாய்களை தாக்கியதாக தகவல் இல்லை. அதன் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்த பின், மாவட்ட வன அலுவலரின் அனுமதி பெற்று கூண்டு வைக்கப்படும். அதேசமயம், மக்கள் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...