மக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மதுக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.
கோவை: கோவை சுகுணாபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று தன்னாசியப்பன் கோவில் கேட்டிலும், உள்பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இது குறித்து மதுக்கரை வனச்சரகர் சந்தியா கூறுகையில், "சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுவரை ஆட்கள், கால்நடைகள், வளர்ப்பு நாய்களை தாக்கியதாக தகவல் இல்லை. அதன் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்த பின், மாவட்ட வன அலுவலரின் அனுமதி பெற்று கூண்டு வைக்கப்படும். அதேசமயம், மக்கள் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று தன்னாசியப்பன் கோவில் கேட்டிலும், உள்பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இது குறித்து மதுக்கரை வனச்சரகர் சந்தியா கூறுகையில், "சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுவரை ஆட்கள், கால்நடைகள், வளர்ப்பு நாய்களை தாக்கியதாக தகவல் இல்லை. அதன் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்த பின், மாவட்ட வன அலுவலரின் அனுமதி பெற்று கூண்டு வைக்கப்படும். அதேசமயம், மக்கள் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.