அரசுப் பள்ளியில் நடைபெற்ற போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் அவரது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதையடுத்து, தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வனத்துறை ஊழியர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழிப்பு நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் அவரது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வனத்துறை ஊழியராக பணியாற்றி வரும் சிறுமியின் தந்தை மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வனத்துறை ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழிப்பு நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் அவரது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வனத்துறை ஊழியராக பணியாற்றி வரும் சிறுமியின் தந்தை மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வனத்துறை ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.