பொள்ளாச்சியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது..!

அரசுப் பள்ளியில் நடைபெற்ற போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் அவரது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதையடுத்து, தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வனத்துறை ஊழியர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழிப்பு நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் அவரது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வனத்துறை ஊழியராக பணியாற்றி வரும் சிறுமியின் தந்தை மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வனத்துறை ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...