சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (23). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துச் சென்ற சபரீஸ்வரன் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்து சிறுமியைத் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த சபரீசன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (23). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துச் சென்ற சபரீஸ்வரன் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்து சிறுமியைத் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த சபரீசன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.