உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.
கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிணத்துக்கடவு நகர இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கு விழாவில் நகர இளைஞரணி அமைப்பாளர் அபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முன்னதாக கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உபகரணங்களும், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆரோ வாட்டர் இயந்திரமும், பின்னர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.

மேலும் அண்ணாநகர் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கினவை கணேஷ், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், ஈஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு, லட்சுமணன், பாலாஜி, முரளி, தினேஷ்குமார், கீதா கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிணத்துக்கடவு நகர இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கு விழாவில் நகர இளைஞரணி அமைப்பாளர் அபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முன்னதாக கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உபகரணங்களும், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆரோ வாட்டர் இயந்திரமும், பின்னர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.
மேலும் அண்ணாநகர் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கினவை கணேஷ், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், ஈஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு, லட்சுமணன், பாலாஜி, முரளி, தினேஷ்குமார், கீதா கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.