கொள்ளைச் சம்பவத்தை தடுத்த செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர், செந்தில்குமார் மற்றும் காவலர்களை, உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள ஏ.டி.எம் மையத்தில் நேற்று, திங்கள் இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சியில், ஹரியானாவை சேர்ந்த இருவரை சம்பவம் நடந்த 15 நிமிடத்திற்குள் பிடித்த செட்டிபாளையம் போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டியுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: வங்கியின் கட்டுப்பாட்டறை மூலம் பெறப்பட்ட எச்சரிக்கை தகவலின் பேரில் தாமதமின்றி 15 நிமிடத்திற்குள் விரைந்து சென்று கொள்ளைச் சம்பவத்தை தடுத்த செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர், செந்தில்குமார் மற்றும் காவலர்களை, உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
அதன்படி, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.எம்.எஸ்.முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர், திறன்பட செயல்பட்ட செட்டிபாளையம் காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்கள்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: வங்கியின் கட்டுப்பாட்டறை மூலம் பெறப்பட்ட எச்சரிக்கை தகவலின் பேரில் தாமதமின்றி 15 நிமிடத்திற்குள் விரைந்து சென்று கொள்ளைச் சம்பவத்தை தடுத்த செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர், செந்தில்குமார் மற்றும் காவலர்களை, உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
அதன்படி, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.எம்.எஸ்.முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர், திறன்பட செயல்பட்ட செட்டிபாளையம் காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்கள்.