வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமார் ஆறு யானை கூட்டமானது கணுவாய் சாலையில் உள்ள யமுனா நகரில் இரவில் மின் விளக்கு ஒளியில் உலா வந்தது. அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக பரவி வருகிறது.
கோவை: மின் விளக்கு ஒளியில் தெருவில் உலாவரும் யானைக்கூட்டம், வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாகக் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு உள்ளது. குறிப்பாக மருதமலை அடிவாரம் பாரதியார் பல்கலைக்கழகம், ஓணாப்பாளையம் போன்ற மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள விலை நிலங்களில் இந்த காட்டு யானையானது இரவு நேரத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வருவது உண்டு.
அவ்வாறு வாரும் யானைகள் விலை நிலங்களில் பயிர் செய்துள்ள கம்பு, தக்காளி, வாழை போன்ற பயிர்களை உண்டு சேதப்படுத்தி சென்று விடுகின்றன. மேலும் தற்போது பனிக்காலம் துவங்க உள்ள நிலையில், வனத்தை விட்டு வெளியேறும் யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவது இப்பகுதியில் வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமார் ஆறு யானை கூட்டமானது கணுவாய் சாலையில் உள்ள யமுனா நகரில் இரவில் மின் விளக்கு ஒளியில் உலா வந்தது.

அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாகக் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு உள்ளது. குறிப்பாக மருதமலை அடிவாரம் பாரதியார் பல்கலைக்கழகம், ஓணாப்பாளையம் போன்ற மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள விலை நிலங்களில் இந்த காட்டு யானையானது இரவு நேரத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வருவது உண்டு.
அவ்வாறு வாரும் யானைகள் விலை நிலங்களில் பயிர் செய்துள்ள கம்பு, தக்காளி, வாழை போன்ற பயிர்களை உண்டு சேதப்படுத்தி சென்று விடுகின்றன. மேலும் தற்போது பனிக்காலம் துவங்க உள்ள நிலையில், வனத்தை விட்டு வெளியேறும் யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவது இப்பகுதியில் வாடிக்கையாகி விட்டது.
இவ்வாறு நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமார் ஆறு யானை கூட்டமானது கணுவாய் சாலையில் உள்ள யமுனா நகரில் இரவில் மின் விளக்கு ஒளியில் உலா வந்தது.
அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.