கோவையில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி பகுதிகளில் சளி, காய்ச்சல் பரிசோதனைகள் மீண்டும் தீவிரம்..!

இனி வரும் நாட்களில் 150 வீடுகளுக்கு ஒரு நபருக்கு சோதனை தீவிரப்படுத்தப்படும். அதே போல், கிராமப்புறங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.


கோவை: கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய கொரோனா வைரஸான "ஒமிக்ரான்" வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடு தோறும் சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வெளிநாடுகளில் ஒமிக்ரான் என்னும் வகை தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடை விதித்து வரும் நிலையில், ஒமிக்ரான் பரவல் மற்றும் அது உடலில் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்றுவருகிறது.

கோவையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உருமாறிய புது வகை கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இதனையடுத்து, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றை கண்டறியும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கையில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 300 வீடுகளுக்கு ஒரு நபர் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் தற்போது நடைபெற்று வருகிறது. இனி வரும் நாட்களில் 150 வீடுகளுக்கு ஒரு நபர் என இப்பணி தீவிரப்படுத்தப்படும். அதே போல், கிராமப்புறங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்படும்,’’ என்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...