கோவையில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி பகுதிகளில் சளி, காய்ச்சல் பரிசோதனைகள் மீண்டும் தீவிரம்..!

இனி வரும் நாட்களில் 150 வீடுகளுக்கு ஒரு நபருக்கு சோதனை தீவிரப்படுத்தப்படும். அதே போல், கிராமப்புறங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.


கோவை: கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய கொரோனா வைரஸான "ஒமிக்ரான்" வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடு தோறும் சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வெளிநாடுகளில் ஒமிக்ரான் என்னும் வகை தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடை விதித்து வரும் நிலையில், ஒமிக்ரான் பரவல் மற்றும் அது உடலில் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்றுவருகிறது.

கோவையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உருமாறிய புது வகை கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இதனையடுத்து, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றை கண்டறியும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கையில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 300 வீடுகளுக்கு ஒரு நபர் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் தற்போது நடைபெற்று வருகிறது. இனி வரும் நாட்களில் 150 வீடுகளுக்கு ஒரு நபர் என இப்பணி தீவிரப்படுத்தப்படும். அதே போல், கிராமப்புறங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்படும்,’’ என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...