கோவை ராம் நகரில் வீடு வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி - இருவர் கைது..!

வீடு வாங்கி தருவதாகக் கூறி முன்பணமாக 30 லட்சம் ரூபாய் பெற்று, திருப்பி தராமல் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ராம் நகரில் வீடு வாங்கி தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை கணபதியை சேர்ந்தவர் டென்ஸ்டன் (46). இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.

இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவை காட்டூரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (50), இவருக்கு சொந்தமான வீடு ஒன்று ராம் நகரில் உள்ளது. அந்த வீட்டை ரூ.95 லட்சத்திற்கு விற்பதாக என்னிடம் ஒப்பந்தம் செய்தார். அதற்கு முன் பணமாக ரூ.30 லட்சம் கொடுத்தேன். அப்போது அவரது நண்பர் கண்ணன் (40) உடன் இருந்தார். மீதி பணத்தை வீட்டை கிரையம் செய்யும் போது தருவதாக தெரிவித்தேன்.

இந்த நிலையில், சத்தியமூர்த்தி தனது வீட்டை கண்ணனுக்கு விற்பனை செய்து விட்டார். கண்ணன், அந்த வீட்டை தனியார் வங்கியில் வைத்து கடன் பெற்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவர்களிடம், எனது பணத்தை திருப்பி தர வேண்டும் அல்லது வீட்டை எனக்கு விற்பனை செய்யவேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் ரூ.30 லட்சத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டனர். எனவே, அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாநகர குற்றப்பிரிவு போலீசார் சத்தியமூர்த்தி, கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...