மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவுடன் டெங்கு அறிகுறி இருப்பவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் 3 சிறுமிகள் டெங்கு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள், கழிவுநீர், மழைநீர் அதிக அளவில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவுடன் டெங்கு அறிகுறி இருப்பவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது காங்கேயம் பாளையம், பண்டிட் நகர், ஊத்துக்குளி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, இந்த மூன்று பேரும் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள், கழிவுநீர், மழைநீர் அதிக அளவில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவுடன் டெங்கு அறிகுறி இருப்பவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது காங்கேயம் பாளையம், பண்டிட் நகர், ஊத்துக்குளி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, இந்த மூன்று பேரும் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.