கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: கூடலூர் அருகே தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் மூவரில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சுற்றுலாவிற்காக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
நீண்ட நேரமாக ஆற்றில் குளிக்க சென்று மூவரில் ஒருவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உடனிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றில் இருந்து தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.
போலீசார் விசாரணையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலாவிற்காக வந்ததும் அப்போது தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது நீச்சல் தெரியாமல் 3 பேரில் வினோத் (45) ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். சுற்றுலாவிற்காக வந்த இடத்தில் குளிக்கச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.