கூடலூர் அருகே தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் பலி..!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் அருகே தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் மூவரில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சுற்றுலாவிற்காக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாக ஆற்றில் குளிக்க சென்று மூவரில் ஒருவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உடனிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றில் இருந்து தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.

போலீசார் விசாரணையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலாவிற்காக வந்ததும் அப்போது தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது நீச்சல் தெரியாமல் 3 பேரில் வினோத் (45) ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். சுற்றுலாவிற்காக வந்த இடத்தில் குளிக்கச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...