கோவை ரயில் மோதி யானைகள் உயிரிழந்த வழக்கு; தண்டனை குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் தெரியும் - வனத்துறை

ரயிலின் வேகத்தை கண்டறிய இன்ஜினில் பொருத்தப்பட்டிருந்த 'சிப்' வனத்துறையால் கைப்பற்றப்பட்டது.


கோவை: கோவை ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தண்டனை குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, மூன்று யானைகள் ரயில் மோதி இறந்தன. விபத்தை ஏற்படுத்திய கோழிக்கோட்டை சேர்ந்த இன்ஜின் டிரைவர் சுபயர் (54), உதவியாளர் அகில் (31) ஆகியோர் மீது தமிழக வனத்துறையினர் வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.

இருவரையும் கைது செய்யாமல், நிர்ப்பந்தத்தின் காரணமாகவே ரயில் டிரைவர், உதவியாளரை விடுவித்ததாக வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

எனவே, ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம் கூறுகையில், 'ரயிலின் வேகத்தை கண்டறிய இன்ஜினில் பொருத்தப்பட்டிருந்த 'சிப்' வனத்துறையால் கைப்பற்றப்பட்டது. நீதிமன்றத்துக்கு வழக்கு வரும்போது முக்கிய ஆவணமாக அது ஒப்படைக்கப்படும். நீதிமன்றம் தான் இருவருக்கும் தண்டனை வழங்க முடியும்,' என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...