கோவை ரயில் மோதி யானைகள் உயிரிழந்த வழக்கு; தண்டனை குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் தெரியும் - வனத்துறை

ரயிலின் வேகத்தை கண்டறிய இன்ஜினில் பொருத்தப்பட்டிருந்த 'சிப்' வனத்துறையால் கைப்பற்றப்பட்டது.


கோவை: கோவை ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தண்டனை குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, மூன்று யானைகள் ரயில் மோதி இறந்தன. விபத்தை ஏற்படுத்திய கோழிக்கோட்டை சேர்ந்த இன்ஜின் டிரைவர் சுபயர் (54), உதவியாளர் அகில் (31) ஆகியோர் மீது தமிழக வனத்துறையினர் வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.

இருவரையும் கைது செய்யாமல், நிர்ப்பந்தத்தின் காரணமாகவே ரயில் டிரைவர், உதவியாளரை விடுவித்ததாக வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

எனவே, ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம் கூறுகையில், 'ரயிலின் வேகத்தை கண்டறிய இன்ஜினில் பொருத்தப்பட்டிருந்த 'சிப்' வனத்துறையால் கைப்பற்றப்பட்டது. நீதிமன்றத்துக்கு வழக்கு வரும்போது முக்கிய ஆவணமாக அது ஒப்படைக்கப்படும். நீதிமன்றம் தான் இருவருக்கும் தண்டனை வழங்க முடியும்,' என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...