கோவையில் 4 இடங்களில் பாலம் கட்டும் பணி..! மிதமான மழைக்கே கடும் வாகன நெரிசல்..! மக்கள் அவதி.

கோவையில் தற்போது உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் அவிநாசி சாலை என 4 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாகவே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதும், காலை வேளைகளில் மழை பெய்யவில்லை. மாலைகளில் மட்டும் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் சாரல் மழை பெய்தது. காலை 8.30 மணியளவில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை துவங்கியதால், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதியடைந்தனர்.

குறிப்பாக, காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், செல்வபுரம், குனியமுத்தூர், கோவைப்புதூர், மதுக்கரை, சுந்தராபுரம், இராமநாதபுரம், சுங்கம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

மழையால், கோவையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் தற்போது உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் அவிநாசி சாலை என 4 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலைகளில் நிதானமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, கவுண்டம்பாளையம் அருகே நடைபெற்று வரும் பால வேலையால், சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. சாலைகளில் உள்ள குழிகளில், ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...