கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பொம்மை துப்பாக்கிகள் சிக்கியது..!

விசாரணையில் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது.



கோவை: கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பொம்மை துப்பாக்கிகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காந்திபுரம் தங்கும் விடுதிகளில் காட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். 

இதனிடையே, காலிங்கராயன் வீதியில் உள்ள விடுதியில் சோதனையிட்டபோது, அங்கு தங்கியிருந்த கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (31), என்பவரிடம் ஏர்கன் மற்றும் பட்டன் கத்தி இருப்பது தெரியவந்தது. மேலும், அவருடன் கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த சக்திவேல் (30) என்பவரும் தங்கியிருந்தார். 

இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் சாகுல் ஹமீது கோவை மற்றும் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. 



விசாரணையில் அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே நாளில் இரு வேறு இடங்களில் ஏர்கன்கள் சிக்கியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...