கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பொம்மை துப்பாக்கிகள் சிக்கியது..!

விசாரணையில் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது.



கோவை: கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பொம்மை துப்பாக்கிகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காந்திபுரம் தங்கும் விடுதிகளில் காட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். 

இதனிடையே, காலிங்கராயன் வீதியில் உள்ள விடுதியில் சோதனையிட்டபோது, அங்கு தங்கியிருந்த கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (31), என்பவரிடம் ஏர்கன் மற்றும் பட்டன் கத்தி இருப்பது தெரியவந்தது. மேலும், அவருடன் கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த சக்திவேல் (30) என்பவரும் தங்கியிருந்தார். 

இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் சாகுல் ஹமீது கோவை மற்றும் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. 



விசாரணையில் அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே நாளில் இரு வேறு இடங்களில் ஏர்கன்கள் சிக்கியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...