விசாரணையில் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது.
கோவை: கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பொம்மை துப்பாக்கிகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் தங்கும் விடுதிகளில் காட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே, காலிங்கராயன் வீதியில் உள்ள விடுதியில் சோதனையிட்டபோது, அங்கு தங்கியிருந்த கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (31), என்பவரிடம் ஏர்கன் மற்றும் பட்டன் கத்தி இருப்பது தெரியவந்தது. மேலும், அவருடன் கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த சக்திவேல் (30) என்பவரும் தங்கியிருந்தார்.
இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் சாகுல் ஹமீது கோவை மற்றும் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் இரு வேறு இடங்களில் ஏர்கன்கள் சிக்கியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.