எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்பு..!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளதால், குறு- சிறு தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க தொழில் துறையினர் எதிர்பார்ப்பு.


கோவை: எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளதால், குறு- சிறு தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க தொழில் துறையினர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

புவி வெப்ப மயமாதல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் வாகனங்கள் மூலம் காற்று மாசு ஏற்படுவது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை பல மடங்கு அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பல்வேறு தொழில்களில் உலகளவில் சிறந்து விளங்கும் கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படும் மோட்டார் தயாரிப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசு இதற்கு உதவ முன்வந்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தொழில்துறையினர், மோட்டார் உற்பத்தியில் குறு, சிறு தொழில் நிறுவனங்களும் அதிக பங்களிப்பு கொண்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(TANSPA) பொருளாளர் மற்றும் கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம்(COWMA) கிளஸ்டர் சர்வீசஸ், தலைவர், சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது:-

தொழில் நகரான கோவை டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட், காஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் மார்க்கெட்டில் அதிகம் விற்பனை செய்யப்பட உள்ளன.

தமிழக அரசு கோவையில் கிளஸ்டர் அமைக்க தேவையான உதவிகள் செய்ய முன்வந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. எலக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை சைக்கிள் முதல் கார், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரை அனைத்து விதமான வாகனங்களும் தயாரிக்க முடியும்.

எனவே அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் மோட்டார் தயாரிப்பதற்கு கோவையில் உள்ள நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் இந்த திட்டத்தில் குறு சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் என அனைத்து தொழில் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பொதுவாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மோட்டார் மிக முக்கிய கருவியாகும். சிறிய வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை அனைத்து விதமான வாகனங்களுக்கும் தேவையான பல்வேறு விதமான திறன் கொண்ட மோட்டார்கள் தயாரிப்பதில் கோவையில் தற்போது மோட்டார் தயாரிக்கும் தொழிலில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் ஈடுபட வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதனால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் கோவை மாவட்டம் முன்னோடியாகத் திகழ வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு சாஸ்தா எம் ராஜா தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...