கோதவாடி குளத்தை பார்வையிட்டு கார்த்திகேய சிவசேனாபதி ஆய்வு.!

வடசித்தூர் மற்றும் செட்டிக்காபாளையம் பி.ஏ.பி கிளை வாய்க்காலிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதனால், 40 ஏக்கர் பரப்பளவிற்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோதவாடி குளத்தை ஆய்வு செய்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தை திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை, கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் தூர்வாரி நீர் வழிப்பாதையை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் இந்த குளத்திற்கு வடசித்தூர் மற்றும் செட்டிக்காபாளையம் பி.ஏ.பி கிளை வாய்க்காலிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.



இதனால் 40 ஏக்கர் பரப்பளவிற்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் இன்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, கோதவாடி குளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் அங்கிருந்த விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கோதவாடி குளம் நிரம்புவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் மணிசுந்தர், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் கிரிகதிர்வேல், பொள்ளாச்சி நகர துணை செயலாளர் கார்த்திகேயன், பாலச்சந்திரன், நடராஜ், கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...