கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.!

கடந்த 3- வாரங்களாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட 10-சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 28-ஆயிரத்து 451-பேர் விண்ணப்பித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 28 ஆயிரத்து 457 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள 10-சட்டமன்றத் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கத் திருத்தம் செய்யச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 3- வாரங்களாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனர். மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த முகாமை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வாக்கு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் மேட்டுப்பாளையத்தில் 2960 பேரும், சூலூரில் 3,718 பேரும் கவுண்டம்பாளையத்தில் 3,644 பேரும், கோவை வடக்கில் 2,593 பேரும் தொண்டாமுத்தூரில் 3,737 பேரும் கோவை தெற்கு 2,175 பேரும் சிங்காநல்லூர் 2,072 பேரும் கிணத்துக்கடவில் 3,321 பேரும் பொள்ளாச்சியில் 1,759 பேரும் வால்பாறையில் 2,380 பேரும் எனப் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் மேற்கொள்வதற்காக 28 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...