மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்திய நண்பர்களை கண்டித்த சிவில் இன்ஜினியருக்கு சரமாரி அடி உதை 2-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்திய நண்பர்களை கண்டித்த சிவில் இன்ஜினியருக்கு சரமாரி அடி உதை 2-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை வடவள்ளி அடுத்த பொம்மனாம் பாளையத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் 26, சிவில் இன்ஜினியர் நேற்று இரவு இவருடைய வீட்டிற்கு வந்த நபர்கள் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நண்பர்களைக் கண்டித்துள்ளார்.
பின்னர் அனைவரும் திரும்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை சித்தார்த் வீட்டுக்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர் சித்தார்த்திடம் நண்பர்கள் என்றும் பாராமல் எப்படி நீ எங்களைத் திட்டலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அவர்கள் சித்தார்த்தை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கி விட்டுச் சென்றனர்.
இதில் அவருக்கு மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சித்தார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அஜீத்குமார் 25,விக்னேஷ் 27, ஆகிய இருவரைக் கைது செய்தனர். தலைமறைவான நீலவேந்தன், ஹரிஹரன், ஆகியோரை தேடி வருகின்றனர்.
கோவை வடவள்ளி அடுத்த பொம்மனாம் பாளையத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் 26, சிவில் இன்ஜினியர் நேற்று இரவு இவருடைய வீட்டிற்கு வந்த நபர்கள் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நண்பர்களைக் கண்டித்துள்ளார்.
பின்னர் அனைவரும் திரும்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை சித்தார்த் வீட்டுக்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர் சித்தார்த்திடம் நண்பர்கள் என்றும் பாராமல் எப்படி நீ எங்களைத் திட்டலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அவர்கள் சித்தார்த்தை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கி விட்டுச் சென்றனர்.
இதில் அவருக்கு மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சித்தார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அஜீத்குமார் 25,விக்னேஷ் 27, ஆகிய இருவரைக் கைது செய்தனர். தலைமறைவான நீலவேந்தன், ஹரிஹரன், ஆகியோரை தேடி வருகின்றனர்.