கோவையில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த நண்பர்கள்: தட்டி கேட்டவருக்கு தர்ம அடி.!

மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்திய நண்பர்களை கண்டித்த சிவில் இன்ஜினியருக்கு சரமாரி அடி உதை 2-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்திய நண்பர்களை கண்டித்த சிவில் இன்ஜினியருக்கு சரமாரி அடி உதை 2-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை வடவள்ளி அடுத்த பொம்மனாம் பாளையத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் 26, சிவில் இன்ஜினியர் நேற்று இரவு இவருடைய வீட்டிற்கு வந்த நபர்கள் மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நண்பர்களைக் கண்டித்துள்ளார்.

பின்னர் அனைவரும் திரும்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை சித்தார்த் வீட்டுக்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர் சித்தார்த்திடம் நண்பர்கள் என்றும் பாராமல் எப்படி நீ எங்களைத் திட்டலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அவர்கள் சித்தார்த்தை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கி விட்டுச் சென்றனர்.

இதில் அவருக்கு மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சித்தார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அஜீத்குமார் 25,விக்னேஷ் 27, ஆகிய இருவரைக் கைது செய்தனர். தலைமறைவான நீலவேந்தன், ஹரிஹரன், ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...