இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில் 72-யூனிட் இரத்தம் தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் 72-யூனிட் இரத்தம் தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரி சார்பாக சோமையம்பாளையம் பகுதியில் நேற்று (28.11.2021) இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பாரதி மற்றும் ஒன்றிய செயலாளர் ந.ராஜா முகாமை துவக்கி வைத்தனர்.

இரத்த தான முகாமை வாழ்த்தி சோமயம்பாளையம் ஊராட்சி தலைவர் கே.பி.ரங்கராஜ், முன்னாள் சோமயம்பாளையம் ஊராட்சி துணை தலைவர் ஆனந்த், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, அருள் மற்றும் துரைசாமி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் நிர்வாகிகள் மோகன்ராஜ், கேசவ மணி, முருகன் மற்றும் நாராயணசாமி கலந்து கொண்டனர்.
இறுதியாக சோமையம்பாளையம் கிளை தலைவர் விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.