கோவையில் வரத்து அதிகரிப்பால் குறைந்து வரும் தக்காளி விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

கோவையில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக மழை இல்லாததால் தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் தக்காளி விலையும் குறைந்துள்ளது.

கோவையில் கடந்த வாரம் பெய்து வந்த தொடர் மழையின் காரணத்தால் தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டது. உழவா் சந்தை உள்பட பல்வேறு இடங்களில் தக்காளி கிடைக்காமல் நுகா்வோா்கள் பாதிக்கப்பட்டனா். நுகா்வோா்களுக்கு எளிதில் தக்காளி கிடைக்கும் விதமாக பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக மழை இல்லாததால் தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.120 க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.50 முதல் 55 ஆக குறைந்துள்ளது. உழவா் சந்தைகளில் ரூ.50 முதல் ரூ.55க்கும், வெளி சந்தைகளில் ரூ.60 முதல் 70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் மழையின் தாக்கத்தால் உழவா் சந்தைகளுக்கு கடந்த வாரம் 15 டன் தக்காளி வரத்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் தக்காளி வரத்து 20 டன் ஆக உயா்ந்துள்ளது. இதனால் விலையும் ரூ.50 முதல் ரூ.55 ஆக உள்ளது என்றனா்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...