உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
திருப்பூர்: திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்(32) பனியன் தொழிலாளி. இவரது மனைவி தஸ்லிமாபானு. இவர்களுக்கு முகமது அர்ஸத், ஆபிதா பானு என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்து விட்டார். இந்நிலையில், முகமது ரபிக் வீட்டிலிருந்த 2 லட்சம் பணத்தையும், 15 பவுன் நகையையும் தனது மனைவியின் சகோதரியான அபிராமியிடம் நம்பிக்கையின் பேரில் கொடுத்து வைத்துள்ளார்.
தற்பொழுது குழந்தைகளின் படிப்பிற்காக அந்த தொகையையும், நகையையும் திருப்பி கேட்டபோது அபிராமி அதனை திருப்பித் தராமல் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து முகமது ரபிக் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். அதன் மேலும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், முகமது ரபிக் இன்று தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, பையில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார்.

அப்போது, உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்(32) பனியன் தொழிலாளி. இவரது மனைவி தஸ்லிமாபானு. இவர்களுக்கு முகமது அர்ஸத், ஆபிதா பானு என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்து விட்டார். இந்நிலையில், முகமது ரபிக் வீட்டிலிருந்த 2 லட்சம் பணத்தையும், 15 பவுன் நகையையும் தனது மனைவியின் சகோதரியான அபிராமியிடம் நம்பிக்கையின் பேரில் கொடுத்து வைத்துள்ளார்.
தற்பொழுது குழந்தைகளின் படிப்பிற்காக அந்த தொகையையும், நகையையும் திருப்பி கேட்டபோது அபிராமி அதனை திருப்பித் தராமல் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து முகமது ரபிக் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். அதன் மேலும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், முகமது ரபிக் இன்று தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, பையில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார்.
அப்போது, உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.