புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோடு அருகே வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவர் அதே பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லம். இவர்களுக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
ராஜேந்திரன் வேஸ்ட் குடோன் வியாபாரம் மட்டும் இன்றி ஞாயிற்றுக்கிழமைகளில் கடுகு, சீரகம் போன்ற மளிகை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வெங்கடேஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் வழக்கம்போல் ராஜேந்திரனும் அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு மளிகை பொருட்களை வியாபாரத்திற்காக கொண்டு சென்றனர்.

இதனிடையே, வியாபாரம் முடித்து இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ராஜேந்திரன் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாயை கொண்டு சோதனை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவர் அதே பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லம். இவர்களுக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
ராஜேந்திரன் வேஸ்ட் குடோன் வியாபாரம் மட்டும் இன்றி ஞாயிற்றுக்கிழமைகளில் கடுகு, சீரகம் போன்ற மளிகை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வெங்கடேஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் வழக்கம்போல் ராஜேந்திரனும் அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு மளிகை பொருட்களை வியாபாரத்திற்காக கொண்டு சென்றனர்.
இதனிடையே, வியாபாரம் முடித்து இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ராஜேந்திரன் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாயை கொண்டு சோதனை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.