கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவருடைய தம்பி இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பிளஸ் 2 படித்து வருகிறார். அவருடைய தம்பி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், குனியமுத்தூர் வசந்தம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஆஷிக் (23), என்பவர் இரண்டு பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் இரண்டு பேரையும் செல்வபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த மாணவர்களின் தந்தை கோவை மேற்கு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆஷிக் 2 மாணவர்களையும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, தற்போது பாலியல் தொந்தரவு தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார் தெரிவிக்க எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பிளஸ் 2 படித்து வருகிறார். அவருடைய தம்பி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், குனியமுத்தூர் வசந்தம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஆஷிக் (23), என்பவர் இரண்டு பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் இரண்டு பேரையும் செல்வபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த மாணவர்களின் தந்தை கோவை மேற்கு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆஷிக் 2 மாணவர்களையும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, தற்போது பாலியல் தொந்தரவு தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார் தெரிவிக்க எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.